தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அமமுக கட்சியைச் சேர்ந்த கயத்தாறு ஒன்றியச் செயலாளர் திரு.C.செல்வகுமார் அவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலையில் தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அமமுக கட்சியைச் சேர்ந்த கயத்தாறு ஒன்றியச் செயலாளர் திரு.C.செல்வகுமார் அவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலையில் தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார்.
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை அமமுகவிலிருந்து விலகிய தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கயத்தாறு ஒன்றியச் செயலாளர் திரு.C.செல்வகுமார் அவர்கள் சந்தித்து தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
கழக செய்தி தொடர்பாளராக திரு.R.அண்ணாதுரை அவர்கள் இன்று (03.03.2020) முதல் நியமிக்கப்பட்டுள்ளதாக கழக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழக முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று “மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்” குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் NIFTY SPORTS INDIA சார்பில் மகளிர் இருசக்கர வாகன பேரணியை துவக்கி வைத்தனர்.
மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் இன்று (3.03.2020) கழக அரசின் திட்டங்கள், சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் “சொல்வோம் – வெல்வோம் – சிறப்பு பயிற்சிப் பட்டறை” நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கழக இலக்கிய அணி சார்பில் தயாரிக்கப்பட்ட “எளிமை முதல்வரின் ஏற்றமிகு அரசு” (பாகம்-1) குறுந்தகடு வெளியீடப்பட்டது.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளையொட்டி கழக இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற “சொல்வோம் – வெல்வோம் – சிறப்பு பயிற்சி பட்டறை” நிகழ்ச்சியை கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்து, ஆலோசனை வழங்கினார்.
கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் திரு.N.K.பெருமாள் Ex.MLA அவர்கள், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் திரு.வரதராஜ பெருமாள் ஆகியோர் நேரில் சந்தித்து கழகத்தில் இணைந்தனர்.
திமுகவை சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட அவைத் தலைவரும், விளாத்திகுளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.என்.கே.பெருமாள், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் திரு.வரதராஜ பெருமாள் ஆகியோர் மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நேரில் சந்தித்து, தங்களை கழகத்தில் இணைத்து கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையில் இன்று (02.03.2020) வண்டலூர் – அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இரவு ஒளியில் விலங்குகளின் செயல்பாடுகளை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க ஏதுவாக இரவு உலா அழைத்து செல்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை M-Auto Electricity Mobility Pvt. Ltd., நிறுவனத்தின் தலைவர் திரு.மன்சூர் அலிகான் அவர்கள் சந்தித்து பெண்களால் இயக்கப்படும் மின்சார ஆட்டோ மற்றும் நடமாடும் தேநீர் விற்பனையகம் ஆகியவை குறித்து விளக்கி வாழ்த்து பெற்றார்.